விஜய் சேதுபதி பட தயாரிப்பாளருக்கு கொரோனா உறுதி… ரசிகர்கள் அதிர்ச்சி…

செவ்வாய், 27 அக்டோபர் 2020 (15:30 IST)
இந்நிலையில் பிரபல தமிழ் பட தயாரிப்பாளர் ஜே.சதீஸ்குமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 கோடிக்கு அதிகமாக உள்ளது.

இந்தியாவில் 80 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஐந்தாவது கட்டமாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு உள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்று ஆரம்ப காலத்தை விட பரவல் மற்றும் இறப்பு விகிதம் குறையத் தொடங்கியுள்ளது. அதேசமயம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் பிரபல தமிழ் பட தயாரிப்பாளர் ஜே.சதீஸ்குமாருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்,  தனது கேஎஸ்கே என்ற நிறுவனம் சார்பில் பல திரைப்படங்களை விநியோகித்துள்ளார்.

பின்னர்,  தரமணி, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா , நடுவில் கொஞ்சம்பக்கத்த காணோம், தங்க மீன்கள், அண்டாவ காணோம் உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்து முன்னணி தயாரிப்பாளராகவும் உள்ளார்.

இந்நிலையில், இவர் தற்போது விஜய் ஆண்டனியுடன்  அக்னிச் சிறகுகள் என்ற படத்திலும் நடித்து வருகிறார்…இவருக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போகவே மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டபோது, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்