’ஆச்சார்யா’ படுதோல்வி: சிரஞ்சீவியிடம் நஷ்ட ஈடு கேட்கும் விநியோகிஸ்தர்கள்

திங்கள், 9 மே 2022 (16:37 IST)
சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் தேஜா நடித்த ஆச்சார்யா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் சிரஞ்சீவியிடம் விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த ’ஆச்சார்யா’ திரைப்படத்திற்கு முதல் நாளே எதிர்மறை விமர்சனங்கள் கிடைத்தது. இதன் காரணமாக இந்த படத்தின் வசூல் சரிந்தது 
 
இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு 75% வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் கடும் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிரஞ்சீவியின் ’ஆச்சார்யா’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டு கடிதம் எழுதி வருவதாகவும் இதனால் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் தேஜா கடும் அதிர்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
’ஆச்சார்யா’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் அனைவருக்குமே 60 முதல் 75 சதவீதம் வரை நஷ்ட ஈடு கேட்டு வருவதால் சிரஞ்சீவியின் பதிலை எதிர்பார்த்து அனைவரும் காத்திருக்கின்றன
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்