நடிகை ஐஷ்வர்யாவின் நெருக்கமான காட்சிக்கு பச்சன் வீட்டில் எதிர்ப்பு

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (13:11 IST)
ஏ தில் ஹை முஷ்கில் என்ற ஹிந்தி படத்தில் ஐஷ்வர்யா மற்றும் ரன்பீர் மீது படிந்திருக்கும் சாக்லேட்டை, இருவரும் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி நக்கிக் கொள்ளவது போல் உள்ள காட்சி பச்சன் வீட்டாருக்கு பிடிக்கவில்லை எனவும், அதனால், அப்படம் திரைக்கு வருவதற்கு முன்பு, அந்த நெருக்கமான காட்சியை நீக்கும்படி அப்படத்தின் இயக்குனர் கரண் ஜோஹரிடம் பச்சன் வீட்டில் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.


 


ஆனால், அது போல் அவர்கள் கூறிவில்லை எனவும், எது போன்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தால் குடும்பத்தின் மரியாதை இழக்காது என்று ஐஷ்வர்யாவிற்கு தெரியும் என்றும் பச்சன் வீட்டின் நெருக்கமானவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

ஏற்கனவே, ஐஷ்வர்யா ராய், ரன்பீருடன் முத்த காட்சியில் நடிக்க மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. அதனால், அக்காட்சியை பொய்யாக உருவாக்கப்பட்டது. இப்படத்தில் அனுஷ்கா சர்மா, ஃபவாட் கான், லிசா ஹெடன், இம்ரான் நக்வி, சன்னி லியோன் போன்ற நட்சத்திரங்களும் சின்ன கதாபாத்திரத்தில் வருகிறார்கள்.  இப்படம்  அக்டோபர் 28-ஆம் தேதி திரைக்கு வரும் என கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்