தெலுங்கில் ரிலீஸ் ஆகாத அயலான் திரைப்படம்… காரணம் ஷாருக் கானா?

vinoth
வியாழன், 1 பிப்ரவரி 2024 (07:19 IST)
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

கேப்டன் மில்லர், அயலான், மிஷன் 1 மற்றும் மெரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்கள் ரிலீஸான நிலையில் அயலான் படத்துக்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்தன. படத்தில் இடம்பெற்ற வி எஃப் எக்ஸ் மற்றும் ஏலியன் சம்மந்தப்பட்ட காட்சிகள் குழந்தைகளை கவர்ந்தது. ஆனால் பெரியவர்களின் பொறுமையை இந்த படம் பல இடங்களில் சோதித்தது.

இதையடுத்து ஜனவரி 26 ஆம் தேதி அயலான் திரைப்படத்தை தெலுங்கில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து சிவகார்த்திகேயன் தெலுங்கில் ப்ரமோஷன் பணிகளிலும் ஈடுபட்டார். ஆனால் இப்போது குறிப்பிட்ட தேதியில் அயலான் ரிலீஸ் ஆகவில்லை. இதற்குக் காரணம் ஷாருக் கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம்தான் என்று சொல்லப்படுகிறது. அயலான் படத்தின் DI வேலைகளை ரெட் சில்லிஸ் நிறுவனம் செய்துள்ளது. அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய தொகை இன்னும் கொடுக்கப்படாததால் அவர்கள் ரிலீஸின் போது கண்டெண்ட் கொடுக்கவில்லையாம். அதனால்தான் படம் ரிலீஸ் ஆகவில்லையாம். இது சிவகார்த்திகேயனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்