9 ஆண்டுகளுக்குப் பின் தொடரும் சர்ச்சை… ஆர்யாவுக்கு வந்த சிக்கல்!

வியாழன், 17 செப்டம்பர் 2020 (11:46 IST)
அவன் இவன் படத்தில் சிங்கம்பட்டி ஜமீனை இழிவுபடுத்தியதாக நடிகர் ஆர்யா மேல் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜராக சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஆர்யா மற்றும் விஷால் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு அவன் இவன் என்ற திரைப்படம் உருவானது. அதை பாலா இயக்கி இருந்தார். இந்த படத்தில் நடிகர் ஜி எம் குமார் ஜமீன்தாராக நடித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீனை இழிவுபடுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

அதை விசாரித்த நீதிமன்றம் நடிகர் ஆர்யாவை 28 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்