ரஞ்சித்தின் சல்பேட்டா அப்டேட்… படப்பிடிப்பை தொடங்கும் படக்குழு!

ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (16:25 IST)
பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் சல்பேட்டா திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான காலா திரைப்படத்துக்கு பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின் சல்பேட்டா என்ற திரைப்படம் உருவாக உள்ளது. இதில் ஆர்யா பாக்ஸராக நடிக்க உள்ளார். இதற்காக அவர் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.

கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இப்போது படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அதன் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்