6 படங்களின் கதையும் ஒரே மாதிரியா? அதில் ரஜினி, அஜித் படங்களும் அடக்கம்.. ஆச்சரிய தகவல்..!

Siva

செவ்வாய், 24 ஜூன் 2025 (17:47 IST)
தமிழ் திரையுலகில் சில சமயங்களில் ஒரே மாதிரியான கதைக்கருவுடன் இரண்டு படங்கள் உருவாவது உண்டு. ஆனால், தற்போது ஒரே நேரத்தில் ஆறு படங்கள் எதிர்பாராத வகையில் ஒரே மாதிரியான 'கடலோரப்' பின்னணியில் உருவாகி வருவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ரஜினிகாந்த் நடித்து வரும் 'கூலி' படத்தின் கதை, கடலோரத் துறைமுகங்களில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டது என்று கூறப்படுகிறது. அதேபோல், கார்த்தி நடிப்பில், தமிழரசன் இயக்கத்தில் உருவாகி வரும் படமும் கடலோர பகுதி மக்களின் வாழ்க்கை மற்றும் சில பிரச்சனைகளை பேசும் கதை என்று தெரிகிறது.
 
அருண்ராஜ் காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படமும் கடலோர பகுதியை சார்ந்த கதை என்றும், அதேபோல, சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மதராஸி’ படமும் துறைமுகங்களில் நடக்கும் பிரச்சனைகளை கொண்டது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இவற்றுடன், சூரி நடிப்பில், மணிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'மண்டாடி' என்ற படமும் கடலில் நடக்கும் சம்பவங்களின் கதைதான் என்று கூறப்படுகிறது. இறுதியாக, அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படமும் கடலோரப்பகுதிகளில் நடக்கும் ஒரு பெரிய குற்றச் செயல் சம்பந்தப்பட்டது என்றும் தகவல் கசிந்துள்ளது.
 
ஒரே நேரத்தில் ஆறு படங்கள் கடலோரம் மற்றும் துறைமுகங்களை மையமாக கொண்டிருப்பதால், இந்தப் படங்கள் அனைத்தும் ஒரே கதையா அல்லது வெவ்வேறு கதைக்களத்தை கொண்டவையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த தற்செயலான ஒற்றுமை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்