சிம்பு - வெங்கட்பிரபு படத்திற்கு வாய்ப்பே இல்லை.. சிம்புவின் லைன் - அப்பில் ‘மாநாடு 2’ இல்லையா?

Siva

செவ்வாய், 24 ஜூன் 2025 (17:38 IST)
நடிகர் சிம்பு, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படம் உருவாக இருப்பதாக யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. ஆனால், தற்போது நம்பத்தகுந்த திரையுலக வட்டாரங்களில் இருந்து, இந்த திரைப்படம் இப்போதைக்கு உருவாக வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 
சிம்பு ஏற்கனவே தனது பிறந்தநாள் அன்று தான் ஒப்பந்தமான மூன்று படங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அந்த மூன்று படங்களுக்கு முன்பே  அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படமும் கமிட் ஆகியுள்ளதால் தற்போது இந்த 4 படங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார் என்றும், அந்த படங்களை முடித்த பின்னர்தான் அடுத்த படத்திற்கான பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
 
குறிப்பாக, சிம்பு தனது 4 படங்களையும் முடித்த பிறகு , 'மாநாடு' படத்தின் இரண்டாம் பாகம் நடிக்கலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இப்போதைக்கு எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது.
 
ஆகவே, சிம்பு ஏற்கனவே ஒப்பந்தமான 4 படங்களை முடித்தவுடன், வெங்கட் பிரபுவுடன் அவர் இணைவாரா அல்லது 'மாநாடு 2' படம் உருவாகுமா என்பது குறித்து அப்போதுதான் தெளிவாக தெரியும் என சிம்புவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்போதைக்கு சிம்பு-வெங்கட் பிரபு படம் குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை என்றும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
 
இந்தச் சூழலில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும், அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்