மணிரத்னத்தின் அடுத்த படத்துக்கு கதை எழுதும் பிரபல எழுத்தாளர்!

புதன், 16 ஆகஸ்ட் 2023 (09:49 IST)
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால் முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகம் பெரிதாக வசூல் செய்யவில்லை.

இந்நிலையில் மணிரத்னம் அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் மணிரத்னம். நாயகன் படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுகிறார்கள். இந்த படத்தில் நடிகர் சிம்பு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்துக்கான கதையை இயக்குனர் மணிரத்னத்தோடு இணைந்து பிரபல கதாசிரியரான ஆர் செல்வராஜ் எழுதுவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஏற்கனவே அலைபாயுதே படத்தில் மணிரத்னத்தோடு இணைந்து கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்