ஏ.ஆர்.ரஹ்மானின் ''மறக்குமா நெஞ்சம்' நிகழ்ச்சி ரத்து

சனி, 12 ஆகஸ்ட் 2023 (17:16 IST)
இந்திய சினிமாவின் முன்னணி  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர்,  தமிழ்,  இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில், இவர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 1-2 ஆகிய படங்களுக்கு இசையமைத்திருந்தார். இது பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, சமீபத்தில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்த மாமன்னன் படத்திற்கு இசையமைத்திருந்தார்.  

இந்த நிலையில்,  சென்னை பனையூரில்  ஏ.ஆர்.ரஹ்மான் ''மறக்குமா நெஞ்சம்'' என்ற இசை நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்திருந்தார்.

ஆனால், இன்று மழை காரணமாக மைதானத்தில் மழை நீர் தேங்கியதால்  இன்று நடக்கவிருந்த இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஏ.ஆர்.ரஹ்மான் தன் டுவிட்டர் பக்கத்தில் விரைவில் இந்த நிகழ்ச்சி குறித்த தேதி அறிவிக்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.

My Dearest Friends …Owing to adverse weather conditions and persistent rains, it is only made advisable for the health and safety of my beloved fans and friends to reschedule the concert to the nearest best date, with the guidance of the statutory authorities.
More details on… pic.twitter.com/HRAyqo5y0n

— A.R.Rahman (@arrahman) August 12, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்