அண்ணன் சொடக்குப் போட்டா சம்பவம்தான்… வேட்டையன் எதிர்பார்ப்பை எகிறவைத்த அனிருத்!

vinoth

செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (07:50 IST)
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தின் ஷூட்டிங்க் முடிந்துள்ள நிலையில் இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இடையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. ஆனால் நேற்று ரிலீஸ் தேதியை வேட்டையன் படக்குழு உறுதி செய்துள்ளது.

இதுவரை படத்தில் இருந்து எந்த பாடல்களும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் வேட்டையன் ரிலீஸ் அப்டேட்டை பகிர்ந்த அனிருத் “அண்ணன் சொடக்கு போட்டா சம்பவம்தான்” என கூறியுள்ளார். இதனால் இந்த வரிகள் படத்தில் ரஜினியின் அறிமுகப் பாடலில் இடம்பெறும் வரிகளாக இருக்கும் என்று ரசிகர்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்