உச்சி வெயிலில் சன்பாத் எடுக்கும் ஆண்ட்ரியா!

திங்கள், 11 அக்டோபர் 2021 (14:36 IST)
நடிகை ஆண்ட்ரியா மாலத்தீவுகளில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார். இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஆண்ட்ரியா அவ்வப்போது தனது புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது மாலத்தீவுகளில் சுற்றுலா சென்ற போது எடுத்த சன் பாத் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்