நான் யாரிடமும் திருடவில்லையே… விமர்சனங்களுக்கு அக்‌ஷய் குமார் பதில்!

Webdunia
புதன், 16 நவம்பர் 2022 (15:55 IST)
இந்த ஆண்டு ஐந்து படத்தில் நடித்தார் அக்‌ஷய் குமார். ஆனால் ஒரு படம் கூட ஹிட்டாகவில்லை. கடைசியாக அவர் நடிப்பில் ராம்சேது திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது.

இயக்குனர் அபிஷேக் சர்மா இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ள படம் ‘ராம் சேது’. இந்த படத்தில் சத்யதேவ், நாசர், ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படமும் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் ஒரே நேரத்தில் பல படங்களில் நடிப்பதால்தான் அவரால் எந்த படத்துக்கும் கவனம் செலுத்த முடியவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து பேசியுள்ள அக்‌ஷய்குமார் “நான் ஆண்டுக்கு 5 படங்களில் நடிக்கிறேன். விளம்பரப் படங்களில் நடிக்கிறேன். அது எனது தொழில். நான் யாரிடமும் திருடவில்லை. இந்த கேள்வியே எனக்கு புரியவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்