அஜித் நடித்த குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது.
வேலை நாட்களில் வசூல் குறைந்தாலும் வார இறுதி விடுமுறை நாட்களில் நல்ல வசூலை இன்னும் பெற்று வருகிறது. மே 1 ஆம் தேதி சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் ரிலீஸாகும் வரை இந்த படத்துக்குக் கணிசமான வசூல் இருக்கும் என தெரிகிறது. இந்நிலையில் இதுவரை இந்த படம் தமிழகத்தில் மட்டும் 172+ கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகப் படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
குட் பேட் அக்லி படத்தின் வெற்றிக் காரணமாக அஜித்- ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாகத் தகவல் பரவி வருகிறது. மேலும் அது அஜித்தின் அடுத்தப் படமாகதான் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இது பற்றி பேசியுள்ள தயாரிப்பாளர் தனஞ்செயன் “அஜித், ஆதிக்குடன் மீண்டும் இணைந்து ஒரு படம் பண்ணுவது உறுதி” என்று கூறியுள்ளார். இதற்கிடையில் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு மே 1 ஆம் தேதி அந்தப் பட அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.