ஏன் திருமணம் குறித்து அறிவிக்கவில்லை… மனம் திறந்த டாப்ஸி!

vinoth

வியாழன், 11 ஏப்ரல் 2024 (07:09 IST)
பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகை டாப்ஸி தமிழில் 2011 ஆம் ஆண்டு வெளியான “ஆடுகளம்”திரைப்படம் மூலமாக அறிமுகமானார். பின்னர் பல மொழி படங்களில் நடித்து வந்த அவர் தற்போது இந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். பல தரமான படங்களைக் கொடுத்து வரும் டாப்ஸி சமீபத்தில் நடித்த சபாஷ் மிது திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தொடர்ந்து அவர் இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து வருகிறார்.

டாப்ஸி பேட்மிண்ட்டன் வீரரான மத்தியாஸ் போ என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்நிலையில் டாப்ஸி கடந்த மார்ச் 25 ஆம் தேதி தன்னுடைய காதலர் மதியாஸ் போவை எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டார்.  இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. அதனால் இணையத்தில் கூட திருமணப் புகைப்படங்கள் வெளியாகவில்லை. 

இந்நிலையில் திருமணம் குறித்து இப்போது மனம் திறந்துள்ள டாப்ஸி “என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொது விஷயமாக மாற்ற நான் விரும்பவில்லை. என்னுடைய திருமணம் பற்றி அறிவிக்கவும் நான் மனதளவில் விரும்பவில்லை. என்னுடைய சகோதரி சாகுன் பன்னுதான் எனது திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் செய்தார். என்னுடைய சகோதரிதான் எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டதால் எனக்கு அழுத்தம் இல்லாமல் திருமணம் நடந்தது” எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்