23 வயதான யஷஸ்வி, ஐபிஎல் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே மூன்றாவது முறையாக சிக்ஸ் அடித்த முதல் மற்றும் ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதுவரை இந்த வித்தியாசமான சாதனையை ஒருமுறை கூட செய்தவர்கள் எட்டு பேர் மட்டுமே.
நேற்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி 205 ரன்கள் அடிக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 206 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் மைதானத்தில் களமிறங்கி புவனேஸ்வர் குமார் வீசிய முதல் பந்தை சந்தித்து அந்த பந்தை சிக்சருக்கு விரட்டினார். இதன் மூலம் ஒரு போட்டியில் முதல் பந்தில் 3 முறை சிக்சர் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை பெற்றார்.