உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை: வெற்றியை நெருங்குகிறது தென்னாப்பிரிக்கா..!

Siva

வெள்ளி, 13 ஜூன் 2025 (20:31 IST)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த ஆட்டத்தில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 212 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 207 ரன்களும் எடுத்திருந்தது. இதனை அடுத்து, தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் வெறும் 138 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், வெற்றி பெற 282 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், தற்போது தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்து வரும் நிலையில், இரண்டு விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் எட்டு விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் நிலையில், 170 ரன்கள் எடுக்க வேண்டி இருப்பதால், தென் ஆப்பிரிக்கா அணி வெற்றியை நோக்கி செல்வதாக கூறப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில், விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தால், ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாகப் போட்டி மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்று வரும் நிலையில், இன்றுக்குள் போட்டி முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்