ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு: 5 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் இலங்கை

வியாழன், 28 அக்டோபர் 2021 (20:38 IST)
ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு: 5 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் இலங்கை
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது
 
இதனையடுத்து சற்று முன்னர் இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி 13 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இலங்கை அணியின் பெரரே 35 ரன்களும் அஸ்லங்கா 35 ரன்களும் எடுத்து உள்ளனர் என்பதும் மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க திணறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சை பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார்க் மற்றும் ஜாம்பா தலா 2 விக்கெட்டுகளையும் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி வாகை சூடும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்