டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச முடிவு

சனி, 21 ஏப்ரல் 2018 (19:48 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் டஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய முதல் போட்டியில் பஞ்சாப் - கொல்கத்தா அணிகள் விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் 191 ரன்கள் குவித்தது. இதையடுத்து 192 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 8.2 ஓவர் முடிவில் 96 ரன்கள் குவித்தது. இதனிடையே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
 
இரண்டாவது போட்டியில் பெங்களூர் - டெல்லி அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி சிறிது நேரத்தில் டெல்லி அணி பேட்டிங் செய்ய உள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்