ஐபிஎல் 2018: கொல்கத்தா அணி பேட்டிங்

சனி, 21 ஏப்ரல் 2018 (15:34 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய முதல் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.
 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் களமிறங்க உள்ளது.
 
இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 3 போட்டியில் வென்று, 2 போட்டிகயில் தோற்றுள்ளது. பஞ்சாப் அணி நான்கு போட்டிகளில் விளையாடி 3 போட்டியில் வென்று, 1 போட்டியில் தோற்றுள்ளது.
 
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிபட்டியிலில் முதலிடத்தை பிடிக்கும் என்பதால் இரு அணிகளுமே வெற்றிக்காக கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்