அன்பான கணவர், சிறந்த அப்பா: மேட்ரிமோனி தூதரான எம்.எஸ்.தோனி

செவ்வாய், 13 நவம்பர் 2018 (17:14 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தற்போது எந்த போட்டிலும் விளையாடம் ஓய்வில் உள்ளார். தற்போது அவர் பாரத் மேட்ரிமோனி நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. 
 
லட்சக்கணக்கான இளைஞர்களின் தூண்டுகோலாக இருக்கிறார் தோனி. இவர் மகிழ்ச்சியான வாழ்க்கையை பெற்றிருப்பதன் மூலமும், சிறந்த அப்பாவாகவும், அன்பு மிக்க கணவராக விளங்குவதன் மூலமும், அனைவரையும் கவர்ந்துள்ளார். அதனால் பாரத் மேட்ரிமோனியின் விளம்பர தூதர் இடத்துக்கு இவர்தான் பொருத்தமானவர் என பாரத் மேட்ரிமோனி டாட் காம் நிறுவனத்தின் தலைமை செயல் தெரிவித்துள்ளார்.
 
இது தோனி கூறியுள்ளது பின்வருமாறு, கடந்த 18 ஆண்டுகளாக 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க உதவும் பணியில் பாரத் மேட்ரிமோனி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. லட்சக் கணக்கானோருக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை அளித்த இந்த நிறுவனத்துக்கு தூதராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்