0-5 என்ற கணக்கில் இங்கிலாந்து மண்ணைக் கவ்வும்… முன்னாள் பந்துவீச்சாளரின் கருத்து!

செவ்வாய், 25 மே 2021 (12:53 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்க உள்ள டெஸ்ட் தொடரில் இந்தியா 5 போட்டிகளையும் வெல்லும் என மாண்ட்டி பனேசார் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான  5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஜூன் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. இந்த தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் மாண்ட்டி பேனசார் அந்த தொடரை இந்தியாதான் வெல்லும் என்றும் அதுவும் இங்கிலாந்தை வொயிட்வாஷ் செய்து எல்லாப் போட்டிகளையும் வெற்றி பெறும் எனவும் கூறியுள்ளார். ’ஏனென்றால் அப்போது இங்கிலாந்தில் வெயில்காலமாக இருக்கும். அதனால் மைதானம் வறண்டுதான் இருக்கும். இதுவே வேறு விதமான காலநிலையாக இருந்தால் இங்கிலாந்துக்குதான் வாய்ப்பு எனக் கூறுவேன்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்