அஸ்வினை எடுக்காதது பைத்தியக்காரத்தனம்… கடுமையாக சாடிய இங்கிலாந்து கேப்டன்!

வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (10:55 IST)
நேற்று ஓவலில் தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அஸ்வின் இடம்பெறாதது மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் இன்று ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளைப்  தொடர் சமனில் உள்ளது. இந்நிலையில் நான்காவது போட்டி அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் அணியில் முக்கிய மாற்றமாக அஸ்வின் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது பல முனைகளில் இருந்தும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹ்ன் ‘இது சுத்த பைத்தியக்காரத்தனம். 413 டெஸ்ட் விக்கெட், 5 டெஸ்ட் சதங்கள் எடுத்தவர் அஷ்வின். #பைத்தியக்காரத்தனம்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்