இந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மும்பை இந்தியன்ஸ் அணி தனது 'X' பக்கத்தில் சாமர்த்தியமான பதிவை வெளியிட்டது. KKR-ன் இணை உரிமையாளர் ஷாருக்கான் நடித்த படத்தின் வசனத்தை இரவலாக பயன்படுத்தி, “சூரியன் மறுநாள் உதிக்கும், ஆனால் இரவில் அல்ல என்று நக்கலாக பதிலளித்து, ரோஹித் வேறு எங்கும் செல்லமாட்டார் என்று ரசிகர்களுக்கு உறுதி அளித்தது.
2013 முதல் மும்பைக்கு ஐந்து IPL கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித், IPL 2024க்கு முன் கேப்டன்சியை இழந்தபோது அதிருப்தியில் இருந்ததாக தகவல்கள் வந்தன. எனினும், IPL 2025-க்கு முன், அவர் ரூ. 16.30 கோடிக்கு அணி நிர்வாகத்தால் மீண்டும் தக்கவைக்கப்பட்டார்.