ஜோ ரூட்டை தனியாக விட்டு வீரர்கள் ஒளிந்துகொண்டனர்… முன்னாள் கேப்டன் காட்டம்!

செவ்வாய், 28 டிசம்பர் 2021 (10:03 IST)
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஆஷஷ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 267 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி மிக மோசமாக விளையாடி 68 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஆஷஸ் தொடரில் உள்ள மூன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி முழுமையாக வெற்றி பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஸ்காட் போலந்து தேர்வு செய்யப்பட்டார்.

இந்த தோல்வியால் இங்கிலாந்து அணி கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. இந்நிலையில் போட்டி முடிந்ததும் கேப்டன் ஜோ ரூட்டை தனியாக விட்டுவிட்டு அனைத்து வீரர்களும் பெவிலியனுக்கு சென்று ஒளிந்துகொண்டனர் என முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹ்ன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ‘அவர் தோல்வி தர்மசங்கடத்தைத் தரும். அதற்காக ஒருவர் கூடவா ரூட்டுக்கு ஆதரவாக மைதானத்தில் நிற்க முடியவில்லை’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்