சிஎஸ்கே போராடி தோல்வி.. கொல்கத்தாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு..!

Webdunia
ஞாயிறு, 14 மே 2023 (23:13 IST)
இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை அணி போராடி தோல்வி அடைந்தது.
 
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 145 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 
 
இந்த வெற்றியை அடுத்த கொல்கத்தா அணிக்கு அடுத்த சுற்று செல்ல மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொல்கத்தா அணி 12 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது 
 
இதனால் டெல்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய இரண்டு அணிகளை தவிர மீதம் உள்ள எட்டு அணிகளில் எந்த நான்கு அணிகளும் அடுத்த சுற்று செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்