பண்ட் அடித்த அடியில் இனி கிரிக்கெட் விளையாடுவோமா என அஞ்சினேன்… இங்கிலாந்து பவுலர் பகிர்ந்த தகவல்!

வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (10:58 IST)
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பண்ட் அதிரடியால் இனி கிரிக்கெட் விளையாடுவோமா என்ற சந்தேகத்துக்கு ஆளானேன் எனக் கூறியுள்ளார் ஜாக் லீச்.

இங்கிலாந்து அணி முதல்  டெஸ்ட்டை வென்ற போதிலும் முதல் இன்னிங்ஸில் பண்ட் ஆடிய அதிரடி ஆட்டம் இங்கிலாந்து பவுலர்களை திணறவைத்தது. அதிலும் அந்த அணியின் இடதுகை சுழல்பந்து வீச்சாளர் ஜாக் லீச் பந்தில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசி தெறிக்கவிட்டார். அதுபற்றி இப்போது பேசியுள்ளார் லீச்.

அதில் ‘மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் பண்ட் அதிரடியை பார்த்து இனி கிரிக்கெட் விளையாடுவோமா என்ற அச்சத்துக்கு ஆளானேன். ஆனால் அதன் பின்னர் அதில் இருந்து மீண்டு வந்தேன். வெற்றி பெற்ற போது கலவையான உணர்வுகளுக்கு ஆளானோம். அதுதான் கிரிக்கெட்டை நாங்கள் நேசிக்கக் காரணம்’ எனக் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்