அதன்பிறகு ஆடிய சி எஸ் கே அணி 6 ஓவர்களிலே 65 ரன்கள் சேர்த்தாலும் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதனால் வெற்றி பெறுவது கடினமான நிலையில் இளம் வீர்ர டிவால்ட் பிரவிஸ் அதிரடியாக ஆடி 25 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து வெற்றியை எளிதாக்கினார். இதன் காரணமாக சென்னை அணி 20 ஆவது ஓவரில் 183 ரன்கள் சேர்த்து இலக்கை எட்டியது. தோனி இறுதிவரை களத்தில் நின்று அணியை வெற்றி பெறவைத்தார்.
இந்த சீசனில் 23 நாட்களுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இதுபற்றி போட்டி முடிந்ததும் வர்ணனையாளர் “சில போட்டிகளுக்குப் பிறகு வெற்றி பெற்றுள்ளீர்கள். இதை எப்படி உணர்கிறீர்கள்?” எனக் கேட்டார். அதற்கு தோனி சிரித்துக் கொண்டே “சில போட்டிகளுக்குப் பிறகா? இதுதான் இந்த சீசனில் எங்கள் மூன்றாவது வெற்றி. வெற்றி பெறுவது எப்போதும் நல்ல உணர்வுதான்” எனக் கூறியுள்ளார்.