பாலியல் வழக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கைது.. அணியில் இருந்தும் சஸ்பெண்ட்..!

Siva

வெள்ளி, 8 ஆகஸ்ட் 2025 (09:34 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது மான்செஸ்டரில் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலியல் பலாத்கார புகார் குறித்து கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை அவரை கைது செய்துள்ளது.
 
இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உடனடியாகக்கவனம் செலுத்தி, ஹைதர் அலியை இடைநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. விசாரணை முடிவடையும் வரை அவர் இடைநீக்கத்தில் இருப்பார் என்றும், இதுகுறித்து தாங்கள் முழுமையான விசாரணை நடத்தி வருவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 
 
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஒரு முக்கியமான வீரராகக் கருதப்பட்ட ஹைதர் அலி, இந்த சம்பவத்தால் அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
 
ஹைதர் அலி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பின் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர் என்றும் அவரிடம் அத்துமீறியதால் தான் அவர் இந்த புகாரை அளித்துள்ளதாகவும் காவல்துறையினர் இது குறித்து தெரிவித்துள்ளனர்
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்