சூதாட்ட நிறுவனங்களில் முதலீடு..பிரபல ஐபிஎல் அணியின் நிலை ?

வெள்ளி, 3 டிசம்பர் 2021 (17:02 IST)
அடுத்த ஆண்டு  15 வது ஐபிஎல் தொடர் நடக்கவுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய  இரண்டு புதிய அணிகளை பிசிசிஐ சேர்த்துள்ளது.

இந்த ஏலத்தில், அகமதாபாத் அணியை சிவிசி கேப்பிட்டல்ஸ் என்ற நிறுவனம் ரூ.5,626 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில், 3 வீரர்களை ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், இந்த நிறுவனம் சூதாட்டத்தில் ஈடுபடும் நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,. அகமதாபாத் அணி குறித்து இன்று விவாதிக்கப்படவுள்ளது. அதன் அடிப்படையில் அகமதாபாத் அணியின் நிர்வாகம் மாற்றப்படுமா இல்லையா என்பது தெரியவரும்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்