185 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து: ஆஸ்திரேலியாவுக்கு மேலும் ஒரு வெற்றியா?

Webdunia
ஞாயிறு, 26 டிசம்பர் 2021 (14:36 IST)
181 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து: ஆஸ்திரேலியாவுக்கு மேலும் ஒரு வெற்றியா?
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வென்றுவிட்டது
 
இந்த நிலையில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் தொடங்கியது. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்றது 
 
இங்கிலாந்து அணி பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி வழக்கம்போல் பேட்டிங்கில் சொதப்பிய முதல் இன்னிங்சில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தற்போது இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் என்ற நிலையில் விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 50 ரன்கள் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணியின் கம்மின்ஸ் மற்றும் நாதன் லயன் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர் என்பதும் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்