விஸ்வரூபம் எடுத்த டெல்லி: ராஜஸ்தான் அணி திணறல்

புதன், 2 மே 2018 (23:21 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இன்றைய போட்டி ஆரம்பிக்கும் முன்னரே மழை பெய்ததால் போட்டி 18 ஓவராக குறைக்கப்பட்டது.
 
இந்த நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால், டெல்லி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் ஷா, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றூம் பேண்ட் ஆகியோர்களின் பொறுப்பான ஆட்டத்தால் 17.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்த போது மீண்டும் மழை பெய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
 
உனாகட் மிக அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். குல்கர்னி, ஆர்ச்சர் மற்றும் கோபால் தலா ஒரு விக்கெட்டுக்களை  வீழ்த்தினர். மழை நின்றதும் ஆட்டம் தொடருமா? அல்லது இரு அணிகளுக்கு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்படுமா? என்பது இன்னும் சில நிமிடங்களில் தெரிந்துவிடும்
 
டெல்லி, ராஜஸ்தான், ஐபிஎல் 2018, Delhi, Rajastan, IPL 2018

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்