டோக்கியோ ஒலிம்பிக்; மல்யுத்த போட்டியில் அரையிறுதியில் இந்திய வீரர்!

வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (10:04 IST)
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இதுவரையிலான போட்டிகளில் இந்தியா 2 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று நடந்த ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவிலான மல்யுத்த போட்டியின் கால் இறுதி போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஈரான் நாட்டு வீரரான சியாசி செகாவை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இதனால் பஜ்ரங் புனியா அரையிறுத்திக்கு தகுதி பெற்றுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்