ஐசிசி சாம்பியன் ஆஃப் த மந்த் இவர்தான்… இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி!

புதன், 3 மார்ச் 2021 (16:20 IST)
ஐசிசி மாதாந்திர சிறந்த வீரர்களை தேர்வு செய்து அறிவித்து வரும் நிலையில் பிப்ரவரி மாத  வீரராக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இப்போது புதிய முன்னெடுப்பாக இனிமேல் விருதுகளை மாதம் தோறும் வழங்க உள்ளது. இதற்கான வீரர்கள் பரிந்துரையை ரசிகர்கள் ஆன்லைன் மூலமாக செய்யலாம் என அறிவுறுத்தியுள்ளது. இந்த விருதுகள் மாதம்தோறும்  முதல் திங்கள் கிழமை அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த மாதத்துக்கான சிறந்த வீரர்களுக்கான பட்டியலில் இந்தியாவின் ரவி அஸ்வின் மற்றும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் இருந்த நிலையில் அஸ்வின் தேர்வு செய்யப்ப்பட்டுள்ளார். அவர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக பந்து வீசியதுடன் இல்லாமல் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்