தனது கணவர் மீது வியாசர்பாடி போலீசார் பொய்யான வழக்கை பதிவு செய்திருப்பதாக குற்றம் சாட்டிய திவ்யா, புகார் கொடுக்க எண்ணியபோதும், எழுத படிக்கத் தெரியாத காரணத்தால் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
மேலும், வியாசர்பாடி போலீசில் உள்ள சில அதிகாரிகள், "கஞ்சா விற்பனை செய்பவர்கள் யார் என தெரியப்படுத்தாவிட்டால் பொய் வழக்கில் சிறை செல்வாய்" என மிரட்டியதாக திவ்யா தெரிவித்தார். இதனால் மனமுடைந்த திவ்யா, தற்கொலை முயற்சிக்க சென்றதாகக் கூறப்படுகிறது.