இன்று ஒரே நாளில் 2வது முறையாக தங்கம் விலை உயர்வு.. புதிய உச்சத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை

Mahendran

திங்கள், 29 செப்டம்பர் 2025 (17:58 IST)
சென்னையில் இன்று ஒரே நாளில், இரண்டாவது முறையாக தங்கத்தின் விலை உயர்ந்து, புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இன்றைய மாலை நிலவரப்படி, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 86,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 10,770-க்கு விற்கப்படுகிறது.
 
காலையில் ஒரு சவரனுக்கு ரூ. 480 உயர்ந்த நிலையில், தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக ரூ. 560 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தம் இன்று ஒரே நாளில் ரூ.1040 உயர்ந்துள்ளது. இந்த திடீர் உயர்வு, தங்கம் வாங்குவோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்