அதன்படி, 39 பேரின் குடும்பங்களுக்குச் சேர வேண்டிய ரூ.20 லட்சம் நிதி, அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், காயமடைந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.2 லட்சம் நிதியுதவி விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சென்ற வாரம் உங்களுடனான நம் துக்கத்தை பகிர்ந்துகொள்ள மேற்கொண்ட காணொளி அழைப்பில் நாம் சொன்னது போலவே, நமது சந்திப்பிற்காக, அதற்கான சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். அனுமதி கிடைத்ததும் நிச்சயமாகச் சந்திப்போம்.
இதனிடையே, நாம் ஏற்கனவே (28.9.2025 அன்று) அறிவித்தபடி குடும்ப நல நிதியாக ரூ.20 லட்சத்தை வங்கியின் RTGS வழியாக தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக (18.10.2025) அனுப்பி வைத்துள்ளோம். அதை நமது உதவி கரமாக ஏற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.