கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் அமர்வில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ், ஆளுங்கட்சியின் அலட்சியம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
தவெக தலைவர் விஜய், கரூருக்கு முன்னதாக நான்கு மாவட்டங்களில் பிரச்சாரம் செய்திருந்த நிலையில், அங்கு எவ்வளவு கூட்டம் கூடும் என்பது குறித்த உளவுத்துறை மற்றும் காவல்துறைத் தகவல்கள் அரசுக்குத் தெரியாதா?
இறந்தவர்களின் குடும்பத்தினரின் துயரமான மனநிலையைக் கருத்தில் கொண்டும், சடலங்களை விரைவாக கையாளுவதற்காகவும் மனிதாபிமான அடிப்படையிலேயே உடற்கூராய்வு பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன், நள்ளிரவு 1.45 மணியளவில் 25 மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டு, ஐந்து மேசைகளில் மொத்தம் 14 மணி நேரம் இந்தப் பணிகள் நடைபெற்றன.
அனைத்து உடற்கூராய்வு நிகழ்வுகளும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் எந்தவிதமான ஒளிவுமறைவும் இல்லை. எனவே, உடற்கூராய்வு நடைமுறையில் சந்தேகம் கிளப்புவது ஏற்புடையதல்ல," என்று அமைச்சர் திட்டவட்டமாக பதிலளித்தார்.