குடிபோதையில் வேனை ஓட்டி விபத்து; சிறுவன் பலி : கரூரில் பயங்கரம்

Webdunia
திங்கள், 4 ஜூலை 2016 (18:37 IST)
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள பில்லூர் ஊராட்சி முத்தகவுண்டம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி ராமசந்திரன்.


 


இவரது மகன் சரண் வயது (2). முத்தக்கவுண்டன்பட்டியில் உள்ள தனது வீட்டின் அருகில் சரண் விளையாடிக்கொண்டிருந்தான். 
 
அப்போது கல்லடை ஆணைகவுன்டன்பட்டி ரோட்டில் திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் உள்ள தனியார் மில்லில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் வந்தது. குடிபோதையில் இருந்த வேன் டிரைவர் முத்தகவுண்டம்பட்டியில் பெண் தொழிலாளர்களை இறக்கிவிட்டு கிளம்பிய போது ரோட்டின் ஓரமாக விளையாடிகொண்டிருந்த சரண் மீது வேன் மோதியதில்  சம்பவ இடத்திலேயே சரண் பரிதாபமாக இறந்தான். 
 
இதுகுறித்து சரணின் தந்தை ராமசந்திரன் தோகைமலை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வேன்டிரைவர் சுப்புராமன் மீது வழக்குபதிந்து கைது செய்தார்.

சி.ஆனந்தகுமார் - செய்தியாளர்
அடுத்த கட்டுரையில்