இந்த அடிப்படையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் ரஞ்சிதாவுக்கு சட்டப்படி மகப்பேறு விடுப்பு வழங்கும்படி உளுந்தூர்பேட்டை முன்சீப் நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டனர்.
மேலும், குழந்தை பிறப்புக்கு முன்பும் பின்பும் ஒரு தாய் அனுபவிக்கும் வலிகளை கருத்தில் கொண்டே மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுகிறது. எனவே, மூன்றாவது பிரசவத்திற்காக மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நீதியின் முன் நிற்காது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.