சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு, எழுத்தாளர் நாறும்பூநாதன் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: "கவர்னரால் நிறைவேற்றப்படாத மசோதாக்கள், சுப்ரீம் கோர்ட்டு அறிவுரைப்படி எப்படி நிறைவேற்றப்பட்டதோ, அதேபோல் நீட் தேர்வை ஒழிப்பது குறித்த மறுசீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் கொண்டு செல்லப்பட்டு, நீட்டை ஒழிக்க நல்ல முடிவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெற்றுத் தருவார்.