பங்குச்சந்தை சென்செக்ஸ், நிப்டி இன்று மீண்டும் உயர்வு!

புதன், 6 ஜூலை 2022 (09:37 IST)
இந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிப்டி உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஆனால் நேற்று காலை உயர்ந்த பங்குசந்தை திடீரென மாலையில் சரிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்துள்ளதால் முதலீட்டாளருக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சற்று முன்னர் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்து 53 ஆயிரத்து 436 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை எழுபத்தி 60 புள்ளிகள் உயர்ந்து 15887 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை உயர்ந்து வருவது பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
இருப்பினும் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்ட இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்