உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ்!

திங்கள், 4 ஜூலை 2022 (16:00 IST)
மாலையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்ஸ்க்ஸ் 326 புள்ளிகள் உயர்ந்து 53,234 புள்ளிகளில் வணிகமானது.

 
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் இறக்கம்தான் மிகவும் அதிகமாக உள்ளது என்றும் இதனால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து உள்ளார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை நிலவரம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்த நிலையில் ஏற்ற இறக்கமின்றி சம நிலையில் உள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
காலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 20 புள்ளிகள் மட்டுமே சரிந்து 52,880 என்ற நிலையில் வர்த்தகமானது. அதே போல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 20 புள்ளிகள் மட்டுமே சார்ந்து 17,730 என்ற நிலையில் வர்த்தகமானது. 
 
தற்போது மாலையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்ஸ்க்ஸ் 326 புள்ளிகள் உயர்ந்து 53,234 புள்ளிகளில் வணிகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 83 புள்ளிகள் உயர்ந்து 15,835 புள்ளிகளில் வர்த்தகமானது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்