குடை ரெடியா? இன்று 14 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (09:21 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து வரும் நிலையில் இன்றும் 14 மாவட்டங்களில் மழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. முக்கியமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று இரவு சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்த நிலையில் இன்றும் மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய தகவலின்படி அடுத்த 3 மணி நேரத்திற்குள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை ஆகிய 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்