குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

வியாழன், 29 டிசம்பர் 2022 (21:38 IST)
டிஎன்பிஎஸ்சி  குரூப் 2 தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை சுமார் 18 லட்சம் பேர் எழுதியிருந்தனர்
 
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி  குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளிவரும் என்று தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் காத்திருந்த நிலையில் இந்த தேர்வு முடிவுகள் வெளியாகும்  தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 
 
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குரூப்-4 தேர்வு முடிவுகள்  பிப்ரவரி மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்