டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு!

செவ்வாய், 8 நவம்பர் 2022 (19:46 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியாகியுள்ளன. 
 
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பிரிவில் 5,500 காலி இடங்களுக்கு கடந்த மே மாதம் 21ஆம் தேதி முதல்நிலை தேர்வு நடைபெற்றது
 
இந்த  முதல்நிலைத் தேர்வில் சுமார் 11 லட்சம் பேர் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த நிலையில் இந்த முதல்நிலை தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியாகி உள்ளது 
 
இந்த தேர்வை எழுதியவர்கள் ள் ஆர்வத்துடன் முடிவுகளை பார்த்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி முதன்மை தேர்வு எழுத வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்