மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்...அதிர்ச்சி சம்பவம்

வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (15:47 IST)
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஒய்.எம்.சி.ஏ அருகே தனியார் பள்ளியில் படிக்கும் 12 ஆம் வகுப்புமாணவிக்கு கத்திக்குத்து நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மாணவியை பின் தொடர்ந்த அசிக் என்ற இளைஞ்சர் பள்ளி அருகே மாணவியைக் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற போது அவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

காயமடைந்த மாணவியை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட இளைஞரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்