லிப்ட் கேட்டவரிடம் பெட்ரோலுக்கு பணம் கேட்ட வாலிபர்: கொலையில் முடிந்த தகராறு

ஞாயிறு, 11 ஏப்ரல் 2021 (13:45 IST)
லிப்ட் கேட்டவரிடம் பெட்ரோலுக்கு பணம் கேட்ட வாலிபர்: கொலையில் முடிந்த தகராறு
சென்னையில் லிப்ட் கேட்ட ஒருவரிடம் பெட்ரோலுக்கு பணம் கொடுங்கள் என வாலிபர் தகராறு செய்த விவகாரம் கொலைகள் முடிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
சென்னையில் இருசக்கர வாகனத்தில் வந்த 19 வயது வாலிபர் ஒருவரிடம் 45 வயது நபர் ஒருவர் லிப்ட் கேட்டார். இதனை அடுத்து அந்த நபரை இருசக்கர வாகனத்தில் அவர் சேரும் இடத்தில் இறக்கி விட்டார் வாலிபர். இறங்கியபோது பெட்ரோலுக்கு பணம் கொடுங்கள் என்று கேட்டபோது அந்த நபர் தகராறு செய்தார். இதனை அடுத்து இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது.
 
வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதை அடுத்து 19 வயது இளைஞர் லிப்ட் வந்தவரை அடித்தே கொலை செய்துவிட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் லிப்ட் கொடுத்த நபரை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். அவரது பெயர் சசிகுமார் என்றும் அவரது வயது பத்தொன்பது என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்