இனி ஒருபோதும் ஸ்டெர்லைட் ஆலை இயங்காது: முதல்வருக்கு கனிமொழி நன்றி!

வெள்ளி, 30 ஜூலை 2021 (14:24 IST)
ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் உற்பத்தியை நீடிக்க வேண்டியதில்லை - மு.க.ஸ்டாலின்.
 
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் தமிழ் நாட்டு மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் விதமாக  இனி ஒருபோதும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்காது என்ற உறுதிமொழியை காப்பாற்றிய தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என எம்.பி கனிமொழி கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்