கையடக்க அளவில் சிபியூ தயாரித்து சாதனை! – திருவாரூர் மாணவனுக்கு முதல்வர் பாராட்டு!

புதன், 28 ஜூலை 2021 (12:48 IST)
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவன் கையடக்க அளவில் சிபியூ தயாரித்ததையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவனை நேரில் வர செய்து பாராட்டியுள்ளார்.

பள்ளி பருவ காலத்திலேயே மாணவர்கள் விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் பல சாதனைகளை படைத்து வருகின்றனர். அப்படியாக திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவனான மாதவன் கையளவு சிறிய சிபியூ கருவியை தயாரித்தது சமீபத்தில் ஊடகங்கள் வாயிலாக பிரபலமானது.

இந்நிலையில் மாணவன் மாதவனை நேரில் அழைத்து பாராட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் பல சாதனைகள் புரியவும் மாணவனை வாழ்த்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்